சாத்துார்: அகழாய்வில் சுடு மண்ணால் ஆன பானை கண்டெடுப்பு....

79பார்த்தது
சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் கண்டெடுப்பு.
விருதுநகர் மாவட்டம்.
சாத்துார் அடுத்து வெம்பகோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் சுடு மண்ணால் ஆன முழுமையான 2 பானைகள் மற்றும் மூடிகள் கண்டெடுக்கப்பட்டது.
முன்னோர்களின் வாழ்விடப் பகுதியாக இப்பகுதி இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி