சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் உருண்ட வடிவ மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்துாரை அடுத்த உள்ள வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை சூது பவளம், சுடுமண் முத்திரை, தங்க நாணயம், செப்பு காசுகள், சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3300-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் உருண்டை வடிவ மெகேற்றும் கல் கண்டுபிடிக்கபட்டுள்ளது. தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த காலங்களில் உருண்ட வடிவ மெருகேற்றும் கல் பயன்படுத்தி உள்ளதும், இதன்மூலம் முன்னோர்கள் பொழுது போக்கிற்க்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதும் தொரியவருவதாக தொல்லியல் துறையினர் தகவல் தொல்லியல் தெரிவித்துள்ளனர்.