சாத்தூர்: உண்டியல் காணிக்கை பணி..போலீஸார் பலத்த பாதுகாப்பு

60பார்த்தது
விருதுநகர் மாவட்டம். சாத்தூர் அடுத்த உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருள்கள் கணக்கிடும் பணி நடந்தது. கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, கோயில் உதவி ஆணையர் இளங்கோவன், பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருள் கணக்கிடும் பணி நடந்தது. 

மகளிர் சுய உதவி குழு பெண்கள், கோயில் பணியாளர்கள் அலுவலர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த ஒரு மாத காலத்தில் ரொக்கம் ரூ. 45,61,305ம், தங்கம் 166 கிராம், வெள்ளி 685 கிராம் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியிருந்தனர். இந்தத் தொகை உடனடியாக கோயில் கணக்கில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. உண்டியல் திறப்பை முன்னிட்டு கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி