சாத்தூர்: அகழாய்வில் சுடு மண்ணாலான ஆண்உருவ பொம்மை கண்டெடுப்பு

70பார்த்தது
சாத்துார் அருகே உள்ள வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணால் ஆன சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டு சிகை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ பொம்மையை பார்வையிட்ட அமைச்சர்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துாரை அடுத்து வெம்பக்கோட்டையில் அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வு பணியை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட உடைந்த நிலையில் சுடுமண்ணால் ஆன சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டு சிகை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ பொம்மையை ஆச்சர்யத்துடன் பார்வையிட்டார். இதன் மூலம் கொடுமணம் பட்ட "நன்கலம்” (பதிற்றுப்பத்து 67) சங்கப் புலவர் கபிலரின் வரிகளிலிருந்து, சங்கத் தமிழர்கள் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்து அணிந்தது தெரிவதாகவும், சூதுபவள மணிகள், மாவு கற்களால் செய்யப்பட்ட உருண்டை - நீள்வட்ட வடிவ மணிகள், அரிய வகை செவ்வந்திக் கல் மணிகள் கிடைத்துள்ளன. மேலும் சுடுமண்ணாலான பல வடிவமுடைய ஆட்டக் காய்கள், திமில் உள்ள காளையின் தலை முதல் முன்கால் பகுதி வரை கிடைத்துள்ளது அவர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தை பறைசாற்றுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி