சாத்தூரில் பால் கடையில் பெரும் தீ விபத்து. பல லட்ச மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலுள்ள நகர் மின்சார வாரிய அலுவலகம் அருகே பால் மற்றும் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரம் செய்யும் தங்கராணி (38) என்பவர் நடத்தி வருகிறார். இன்று அதிகாலை பால் மற்றும் ஐஸ்கீரிமை இறக்கி விட்டு கடையை பூட்டி வீடு திரும்பினார். திடீரென கடையில் இருந்து கரும் புகை கிளம்பியது. இதை பார்த்த அருகிலிருந்தவர்கள்,
உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்த தீயணைப்பு படையினரை விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பால் மற்றும் ஐஸ்கிரீம் பண்டங்கள், 10க்கு மேற்பட்ட குளிர்சாதன இயந்திரம் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. இந்த தீவிபத்தில் சுமார் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயிலில் எரிந்து நாசமாயின.
மேலும் இந்த தீ விபத்து
மின்சிவால் ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் இந்த அசபாவித்திம் செய்தார்களாக என சாத்தூர் நகர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.