காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பேட்டி நடிகர் கமலஹாசன் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தை வைத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னடம் தமிழர்களிடையே பிரச்சனையை ஏற்படுத்த மகிழ்கிறார் என விமர்சனம் செய்த மாணிக்கம் தாகூர் கன்னட மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு என்றார்.
மேலும் திராவிட மொழிகளுக்கு இடையே உள்ள எல்லா மொழிகளுக்கு உண்டான சிறப்புகளை நாம் போற்ற வேண்டும் என்றார்.
மேலும் எந்த மொழி மூத்த மொழி என்பதை பேச வேண்டியதில்லை எனவும் இந்த வெறுப்பு அரசியலை பாஜகவும் ஆர்எஸ்எஸ் செய்து கொண்டிருக்கிறது என்றார்.
மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எந்த மொழி சிறந்தது என்பதை நிர்ணயிக்க வேண்டியது அரசியல்வாதிகள் அல்ல எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தான் என்றார்.
மேலும் கீழடியில் வரலாற்று ஆய்வாளர்கள் செய்த ஆராய்ச்சியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வில்லை என குற்றம் சாட்டிய மாணிக்கம் தாகூர் அது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என விமர்சனம் செய்தார்.
மேலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இங்கிருந்து தமிழுக்கு குரல் கொடுப்பதை விட கர்நாடகாவில் சென்று குரல் கொடுக்க வேண்டும் எனவும் பொறுப்போடு அரசியல் செய்ய வேண்டும் என்றார்.