சாத்தூர் கொலையில் சம்பந்தபட்ட 2 பேரிடம் விசாரணை

59பார்த்தது
சாத்தூர் கொலையில் சம்பந்தபட்ட 2 பேரிடம் விசாரணை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று அதிகாலை தலையில் இரும்பு ஜாக்கியால் தாக்கி கொலை செய்து முட்புதரில் மர்ம நபர்கள் வீசி சென்றனர். இந்த கொலை சம்பந்தமாக உடல் கிடந்த பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் இருந்த சிசிடிவி காட்சியை வைத்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை செய்ததில் அதிகாலை 3 மணிக்கு முதலில் இரண்டு நபர்கள் மது வாங்கி செல்வதும் ஒரு மணி நேரம் கழித்து மற்றொறு நபருடன் வந்து மூன்று பேர் சேர்ந்து மது பாட்டில் வாங்கி சென்ற சிசிடிவி வீடியோ பதிவை வைத்து விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சிவகாசியில் உள்ள ஹோட்டலில் பணிபுரியும் மாரிதுரை (45)என தெரியவந்தது. மேலும் அவரை கொலை செய்து வீசி சென்றவர்கள் அவருடன் வந்த மற்ற இருவராக இருக்கும் என்று சந்தேகத்தின் அடிப்படையில் சிவகாசியில் பதுங்கியிருந்த இருவரை போலீசார் பிடித்து வந்து சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் வைத்து கொலைக்கான காரணம் குறித்து இருவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி