விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழதாயில்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது இந்த நிலையில் இன்று காலை பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளனர் அப்பொழுது ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்து பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பனையடிப்பட்டியை சேர்ந்த பாலகுருசாமி(50) சம்பவ இடத்திலேயே உடல் சிதறிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் கண்ணன், ராஜபாண்டி, ராஜசேகர், கமலேஷ் ராம், ராகேஷ் வட மாநிலத் தொழிலாளர்கள் இருவர் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டாசு ஆலையின் போர்மேன் யோகநாதன் கைது செய்து
வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.