சாத்துார்: முள்வேலிக்குள் பட்டாசு தயாரித்தவர் கைது....

59பார்த்தது
சாத்துார் அருகே முள்வேலி அமைத்து பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்தவர் கைது. பேன்சி ரக பட்டாசு மற்றும் கருந்திரிகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெற்றிலையூரணி காட்டு பகுதியில் முள்வேலி அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்யப்படுவதாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேலும் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செண்பகவேலன் தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சாக்கில் மறைத்து வைத்திருந்த கருந்திரி, பேன்சி ரக பட்டாசுகள் உள்பட பல தரப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்து சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெருவை சேர்ந்த காளியப்பன் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி