வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது

2023பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியில் கெங்கையம்மன் கோவில் உள்ளே ஆந்திரமாநிலத்தில் உள்ள பாப்பநுகம்மன் திருக்கோயிலுக்கு
திருப்பனி செய்வதற்கு செய்யப்பட்ட சாமி சிலையை கடந்த நாற்பது நாட்களாக கிராமத்து மக்களுக்கு தெரியாமல் பூசாரி பூஜை செய்து வந்துள்ளார்.
கடந்த மே. 12ம் தேதி அப்பகுதியினர் சிலர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அங்கு புதிதாக இருந்த சிலை பார்த்து பூசாரியிடம் கேட்டபோது மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம்
ஊர் பெரியவர்களுக்கு தெரியவரவே இந்த சம்பவம் தொடர்பாக அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை
தொடர்ந்து சாத்தூர் தாசில்தார் வெங்கடேஷ் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் இன்று கோவிலில் இருக்கும் நிலையே தொடர வேண்டும் எனவும். கோவில் சம்பந்தமான பிரச்சினைக்கு இந்து சமய அறநிலைத்துறை, மற்றும் நீதி மன்றத்தை அனுகி தீர்வு ஏற்படுத்தி கொள்வது என முடிவு செய்யப்பட்டது. சமாதான கூட்டத்தில் துணை வட்டாட்சியர் ராஜாமனி, இருக்கன்குடி காவல் நிலைய ஆய்வாளர் மயில், அப்பையநாயக்கன்பட்டி சார்பு ஆய்வாளர் ரேவதி, கோவில் கமிட்டி தலைவர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கையா ஆகியோர்
கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி