ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள ஜெய ஆனந்த் திரையரங்கு அருகே ஜூலை 10ஆம் தேதி லட்சுமி நகரில் வசிக்கும் பாலகிஷ்ணன், தனது வீட்டில் சாரைப் பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. உடனடியாக அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் பாம்பை உயிருடன் பிடித்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதி காட்டுக்குள் விட்டனர்.