இராஜபாளையம்: கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

57பார்த்தது
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே அரசு மருத்துவமனை முன்பாக ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் வடக்கு சார்பு ஆய்வாளர் மாரியம்மாள் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை சோதனை செய்தனர். 

சோதனையில் தென்றல் நகரை சேர்ந்த ராஜேஷ் (30) என்பவர் பிடிக்கப்பட்டு விசாரணை செய்த போது அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி