இராஜபாளையம்: விஷம் அருந்தி பெண் தற்கொலை...

61பார்த்தது
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே விஷம் அருந்தி பெண் தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா கத்தாளம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணிச்சாமி. இவரது மகள் சாந்தி (வயது 32). இவரது கணவர் ராமசுப்பு. இவர்கள் தற்போது ராஜபாளையம் அருகே உள்ள முத்தாந்தி கிராமத்தில் வசித்து வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று ராமசுப்பு, தனது மனைவி சாந்தியிடம் மது அருந்த பணம் கேட்டு
தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த சாந்தி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கா ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி