இராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சேத்துார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் என்பவரது மகன் ஆறுமுகச்சாமி என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல மாநில லாட்டரி சீட்டுகளை தளவாய்புரம் to இராஜபாளையம் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே விற்பனை செய்து வந்ததை சேத்துார் காவல் நிலைய போலீஸார் பறிமுதல் செய்து ஆறுமுகச்சாமிடம் இருந்து ரொக்க பணம் ரூ1300/- பறிமுதல் செய்து நேற்று(செப்.4) அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.