இராஜபாளையம்: சித்திரை பூக்குழி திருவிழா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

84பார்த்தது
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் புதுப்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பூக்குழித்திருவிழா நடைபெற்றது. இராஜபாளையம் புதுப்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் சித்திரைப்பூக்குழித் திருவிழா கடந்த மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு காலையில் கோவிலில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பூக்குழித் திடலில் தீ வளர்க்கப்பட்டது. 

பூக்குழி இறங்கும் பக்தர்கள் அனைவரும் காப்பு கட்டினர். பின்னர் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் மஞ்சள் பட்டுத்திரை கண்ணாடி சப்பரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார். பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவில் இராஜபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி