விருதுநகர்: டூவீலரில் தவறி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு வயது 19. இவருடைய தாய் பாண்டியம்மாள். சாமிக்கண்ணு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் தோப்பூர் கழுவனாச்சேரி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது சாமிக்கண்ணு ஓடிச்சென்ற வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் காயம் அடைந்த சாமிக்கண்ணு முதலுதவி பெற்று மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உயிரிழந்த சாமிக்கண்ணுவின் தாய் பாண்டியம்மாள் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி