விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவர் பலி. போலீஸார் விசாரணை.
அருப்புக்கோட்டை அடுத்த காரியப்பட்டி அருகே உள்ள நரிக்குடி எஸ். கல்விமடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி இவருடைய மனைவி வானதி. இவர்களது மகன் கவுரிக் (வயது 15) ஏ. முக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். எஸ். கல்விமடை கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக கருப்பசாமி, கவுசிக் ஆகிய 2 பேரும் கல்விமடை தச்சனேந்தல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் கவுசிக் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஏ. முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கவுசிக்கை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து ஏ. முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.