எல்லையில் போரிடும் ராணுவ வீரர்களின் நலன் காக்க வேண்டியும் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் சிறப்பு பூஜை மற்றும் 7 வகையான உணவுகளுடன் அன்னதானம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி அருள்மிகு ஸ்ரீ வேணுகோபாலசாமி திருக்கோவிலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டும் இந்திய எல்லையில் போரிடும் ராணுவ வீரர்களின் நலன் காக்க வேண்டியும் அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராம் பாண்டியன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் வேணுகோபாலசுவாமிக்கு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லெமன் சாதம்,
தக்காளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், புளி சாதம், வெஜிடபிள் பிரியாணி மற்றும் கத்திரிக்காய் கூட்டு
என ஏழு வகையான உணவுகளுடன் ஏழை எளிய மக்களுக்கும் வேணுகோபாலசாமி பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவை தலைவர் ஜெயபெருமாள், நகர செயலாளர் சோலை சேதுபதி, வடக்கு ஒன்றிய செயலாளர் போடம்பட்டி சங்கரலிங்கம் மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.