விருதுநகரிலிருந்து சங்கரலிங்கபுரம் செல்லும் பேருந்து எண் TN 67 N 0795 கொண்ட அரசு பேருந்தின் மேற்கூறையில் தகடு பெயர்ந்து கீழே தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், பேருந்தின் கடைசி பகுதியில் உள்ள சீட்டின் கீழ் பகுதியில் ஓட்டை இருப்பதால் அதையும் சரி செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகளுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்