விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அதிமுக வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் இளைஞரணி செயலாளர் ராம் பாண்டியன் ஏற்பாட்டில் மூன்று நாட்கள் நடைபெறும் மாபெரும் மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டையில் முதன்முதலாக நடைபெற்று வரும் மாநில அளவிலான கபடி போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். முதலில் பெண்களுக்கான போட்டி துவங்கிய நிலையில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த பெண்கள் பிரிவுக்கான கபடி போட்டியில் அந்தியூர் அணி முதல் பரிசையும், மதுரை அணி இரண்டாவது பரிசையும், திருச்சி அணி மூன்றாவது பரிசையும் தட்டிச் சென்றது. முதலிடம் பிடித்த அணிக்கு ரூ 51, 000 ரொக்க பரிசு கோப்பை, இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ 30, 000 ரொக்கப் பணம் மற்றும் கோப்பை, மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு ரூபாய் 20, 000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்ததோடு டாஸ் போட்டு இறுதிப் போட்டியை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.