அருப்புக்கோட்டை எஸ்பிகே பள்ளி சாலை நகராட்சி சுகாதார மையத்தில் நகர்புற மக்களுக்கான ஊட்டச்சத்து நாள் விழா நிகழ்ச்சி மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை எஸ்பிகே பள்ளி சாலை நகராட்சி சுகாதார மையத்தில் நேற்று(18. 5. 23) அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நகர்புற மக்களுக்கான ஊட்டச்சத்து நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவர் கோமதி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், கர்ப்பிணிகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.