அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில்
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக அமைச்சர் கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி நேற்று ஏப்ரல் 13 மாலை 6: 00 மணி முதல் இரவு 9: 30 மணி வரை அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளான சுக்கிலநத்தம், மீனாட்சிபுரம், திருவிருந்தாள்புரம், வெள்ளையாபுரம், குருந்தமடம், ஆமணக்கு நத்தம், வதுவார்பட்டி, போடம்பட்டி, சிதம்பராபுரம், வாழ்வாங்கி மற்றும் செட்டிகுறிச்சி மற்றும் ஆகிய கிராமப் பகுதிகளில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், பெண்கள், விவசாயக் கூலி தொழிலாளிகளை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், விலைவாசி குறை வேண்டும் என்றால் தற்போது உள்ள மோடி அரசாங்கம் மாற வேண்டும். பத்து வருடங்களாக மோடி அரசாங்கத்தில் விலைவாசி எல்லாம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. விலைவாசி குறைய வேண்டுமென்றால் நீங்கள் கை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும் என பேசி வாக்கு சேகரித்தார்.