விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் அதனை சுற்றியுள்ள 26 ஊராட்சிகளில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர்,
அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் சட்டம் அதற்கு எதிராக உள்ளதால் எதுவும் செய்ய முடியாத சூழல் உள்ளது. மத்திய வனத்துறை அமைச்சரிடம் கூறி காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கினால் மட்டுமே விவசாயிகள் மீது வழக்கு போடுவதை நிறுத்த முடியும். ஜனநாயகத்தை காக்க வேண்டிய உள்துறை அமைச்சரே அம்பேத்கரை சிறுமைப்படுத்தியதும் நையாண்டி செய்ததும் கண்டிக்கத்தக்கது. இது அவருடைய மதவாத சிந்தனையை காட்டுகிறது அவருடைய ஆர்எஸ்எஸ் பயிற்சியை காட்டுகிறது. இந்துத்துவ அரசியலை காட்டுகிறது என குற்றம் சாட்டினார்
பாராளுமன்றத்தில் அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் பார்வை அருப்புக்கோட்டையை நிராகரிப்பதாக உள்ளது. அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.