அருப்புக்கோட்டையில் சிவன் கோவில் சந்திப்பில் இருந்து புறவழிச் சாலையை இணைக்கும் சாலையில் எம்டிஆர் நகர், வசந்தம் நகர், ஜோதிபுரம் சந்திக்கும் பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இவ்வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். குண்டும் குழியுமான சாலையில்
தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். கடந்த பல மாதங்களாக சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகிய பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. நாளுக்கு நாள் அதிக அளவு கழிவு நீர் தேங்கி அந்த சாலையை மிக மோசமான சாலையாக மாறி வருகிறது. எனவே உடனடியாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி கழிவு நீர் முறையாக செல்ல நடவடிக்கை மேற்கொள்வதோடு சாலையையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று(10. 10. 23) கோரிக்கை விடுத்துள்ளனர்.