அருப்புக்கோட்டையில் மின்தடை அறிவிப்பு ரத்து - மின்தடை கிடையாது

5721பார்த்தது
அருப்புக்கோட்டையில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து - மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு.

அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி,
பாலையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம் அறிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை (20. 5. 23) சனிக்கிழமை
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி துணை மின் நிலையங்கள் இருந்து மின்சாரம் பெரும் பெரிய புளியம்பட்டி, திருநகரம், விருதுநகர் ரோடு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வெள்ளக்கோட்டை, சொக்கலிங்கபுரம், உள்ளிட்ட நகர் பகுதியிலும் பாளையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம், உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களுக்காக மேற்படி அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதனால் நாளை மின்தடை செய்யப்படாது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி