விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட நடிகரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ லியோனி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் ஐ. லியோனி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போடப்பட்டிருந்த சட்டமசோதா மற்றும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்காமல் உயர்கல்வியை முடக்கிவைத்திருந்த ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்டபோராட்டம் நடத்தி மாநிலஅரசுகளின் உரிமைகளை மீட்டெடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் என்றார்.