விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விருதுநகர் வட்டாரத்தைச் சேர்ந்த சௌடாம்பிகா மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 25 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 202-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 202-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.