விழுப்புரம் - Viluppuram

விழுப்புரம் குறைதீா் கூட்டத்தில் 510 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம் குறைதீா் கூட்டத்தில் 510 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஆட்சியர் சி. பழனி தலைமை வகித்தார். முதியோர், விதவை, ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, தொழில்தொடங்க கடனுதவி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 510 மனுக்களைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த நியாயவிலைக்கடை விற்பனையாளருக்கான முதல், இரண்டாம் பரிசை ராம்பாக்கம் சு. சுஷ்மிதா, கொங்கராம்பூண்டி வி. கோபி, சிறந்த எடையாளருக்கான முதல், இரண்டாம் பரிசை விழுப்புரம் வி. அஸ்லம்கான், திண்டிவனம் த. கண்ணன் ஆகியோருக்கு பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழை ஆட்சியர் சி. பழனி வழங்கினார்.  மேலும், பாம்பு கடித்தும், நீரில் மூழ்கியும், மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் வீதம் ரூ.6 லட்சத்திற்கான காசோலை, தாட்கோ மூலம் 4 பேருக்கு மருத்துவக்காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், மண்டலக்கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி, சமூகப்பாதுகாப்புத்திட்டத் தனித்துணை ஆட்சியர் முகுந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலர் மு. சந்திரசேகர் பங்கேற்றனர்.

வீடியோஸ்


விழுப்புரம்