விழுப்புரம் கே.கே. நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கஞ்சா வைத்திருந்த மூவரை போலீசார் பிடிக்க முயன்றபோது 2 பேர் தப்பியோடினர். ஒருவரை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் கே.கே. நகர் அண்ணா நகரைச் சேர்ந்த ரவி மகன் வானவராயன் (எ) ராகுல், 24; தப்பியோடியவர்கள் தனுஷ்ராஜ், 19; விஷால், 20; என்பது தெரியவந்தது. ராகுலிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ராகுலை கைது செய்து, தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.