விழுப்புரம் வட்டம், சித்தேரிக்கரை, கிருஷ்ணா நகரைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் ராம்குமாா் (30). தனியாா் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவி திவ்யாவுடன் வீட்டின் அறைக்கு தூங்கச் சென்ற ராம்குமாா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது புதன்கிழமை அதிகாலை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், கணவரின் இறப்பில் சந்தேகமிருப்பதாக திவ்யா அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.