விழுப்புரம்: கிராம நிா்வாக அலுவலா்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

73பார்த்தது
விழுப்புரம்: கிராம நிா்வாக அலுவலா்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்களுக்கான பாராட்டு விழுப்புரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் வள்ளலாரி தலைமை தாங்கினார். 

இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ. பூபதி, மாநிலப் பொதுச் செயலர் வி. சுந்தரராஜ், மாநிலத் துணைத் தலைவர் அ. பொய்யாமொழி ஆகியோர் பேசினர். விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், தருமபுரி, தஞ்சாவூர், மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்துப் பேசினர். கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரின் 30 சதவீத பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய குழு அமைக்கவேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தனி ஊதியம், பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்பன உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி பரப்புரை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. 

சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மகளிரணி மாவட்டச் செயலர் ராஜகுமாரி வரவேற்றார். நிறைவில், மாவட்டப் பொருளர் கேசவன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி