விழுப்புரம் அடுத்த மங்களபுரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் அன்புபிரியன், 26; கூலித் தொழிலாளி. இவர், நேற்று மதியம் விழுப்புரம் நாப்பாளைத் தெருப் பகுதியில் நடந்து வந்தார். அப்போது, பைக்கில் வந்த கீழ்ப்பெரும்பாக்கம் ஏரிக்கரைத் தெருவைச் சேர்ந்த மெக்கானிக் அஜித்குமார், 28; என்பரிடம் லிப்ட் கேட்டு, உட்கார்ந்து வந்துள்ளார். அப்போது, பொதுவாகத் திட்டியபடி பைக்கில் அமர்ந்து வந்த அன்புபிரியனை, அஜித்குமார் தன்னைத்தான் திட்டுவதாக நினைத்து, கீழே இறக்கிவிட்டு, கீழே கிடந்த இரும்புப் பைப்பால் கடுமையாகத் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, அஜித்குமாரை கைது செய்தனர்.