விழுப்புரம் மேற்கு அய்யனார் குளத் தெருவை சேர்ந்தவர் நடராஜன், 82; கடந்த 2 ஆண்டுகளாக பக்கவாத நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்த நடராஜன், நேற்று காலை வீட்டின் மாடிக்கு சென்று, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண் டார். தீயில் கருகிய நடராஜனை, குடும்பத் தார் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.