விழுப்புரம் மாவட்டத் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது. நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிப்படி, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, மருத்துவப்படி, மருத்துவக் காப்பீட்டுச் செலவுத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீனவெண்மதி நன்றி கூறினார்.