விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பனையபுரம் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த விக்கிரவாண்டியைச் சேர்ந்த கலாநிதி மாறன், 23 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மாறனை, விக்கிரவாண்டி போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.