விக்கிரவாண்டி அடுத்தஆசூர் கிராமத்தைசேர்ந்த சேர்ந்தவர் தேவகி, 24: இவருக்கும் சென்னை வேளச்சேரியை சேர்ந்த அன்பரசன், 29;ஆகியோருக்கு காலை புதுச்சேரியில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் சொந்த ஊரான ஆசூருக்கு மணக்கோலத்தில் வந்த மணமக்கள் நேராக ஆசூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஓட்டுச்சாவடிக்கு சென்று மணமகள் தேவகி தனது ஓட்டை பதிவு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது
எனக்கு இன்று காலை அன்பரசனுடன் திருமணம் நடந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் இடை தேர்தல் நடைபெறுவதால் எனது சொந்த ஊரான ஆசூரில் எனது ஓட்டை பதிவு செய்தது ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சியை அளிக்கின்றனர்.