விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார், ஜானகிபுரம் மேம்பாலம் அருகே நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மொபட்டில் வந்த மூவரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில், கண்டம்பாக்கம் காலனி மாதேஷ், 22; விழுப்புரம் என். ஜி. ஜி. ஓ. , காலனி விக்னேஷ், 23; கணேஷ், 23; என்பதும், 2 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து, மொபட் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய கண்டம்பாக்கம் காலனி நாராயணசாமியை தேடி வருகின்றனர்.