விழுப்புரத்தில் ஐயப்ப சாமிக்கு மண்டலாபிஷேக விழா

51பார்த்தது
விழுப்புரத்தில் ஐயப்ப சாமிக்கு மண்டலாபிஷேக விழா
விழுப்புரம் ரயில்வே வரசித்தி விநாயகர் கோவிலில், ஐயப்ப சாமிக்கு மண்டலாபிஷேக விழா நடந்தது. வரசித்தி விநாயகர் கோவிலில் உள்ள தர்மசாஸ்தா சன்னதியில், மண்டலாபிஷேக விழா நேற்று காலை 7.00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு ஐயப்ப சாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. முன்னதாக பால் குடங்களுடன், ரயில்வே ராஜகணபதி ஆலயத்திலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடந்தது. இதனையடுத்து, 1.00 மணிக்கு அன்னதானம் நடந்தது. தொடர்ந்து மாலை சுவாமிக்கு அலங்காரம் செய்து, பதிப்பூஜையும், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி