வாக்குச்சாவடியில் குளவி கூடு -தீயணைப்பு துறையினர் அழிப்பு

66பார்த்தது
வாக்குச்சாவடியில் குளவி கூடு -தீயணைப்பு துறையினர் அழிப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஓட்டுச்சாவடி மையத்தின் உள்ளே புதியதாக குளவி கூடு கட்டியிருந்தது. இது நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு சாவடி அலுவலராக பணிபுரிந்த பிரபாகரன் என்பவரை தாக்கியது. இதனால் ஓட்டுச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி செயல்அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் ஆகியோர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளவி கூண்டை அழித்தனர். இதன் பின்னர் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளித்தனர்.

தொடர்புடைய செய்தி