விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கவுதமசிகாமணி எம். பி. , லட்சுமணன் எம். எல். ஏ. , மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், வி. சி. , வேட்பாளர் ரவிக்குமார், காங். , மாவட்ட தலைவர் சீனுவாசகுமார், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் சித்திக்அலி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், அ. தி. மு. க. , வேட்பாளர் பாக்யராஜ் மற்றும் நிர்வாகிகள் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.