தெற்கு மத்திய ரெயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பொறியியல்
பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் காரணமாக, விழுப்புரத்தில் இருந்து அதிகாலை
5. 30 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருப்பதி
முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்16854) காட்பாடி -திருப்பதி இடையே வருகிற 15-ந் தேதி வரை பகுதியளவில் ரத்து
செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். இதேபோல் மறுமார்க்கத்தில்
திருப்பதியில் இருந்து பிற்பகல் 1. 50 மணிக்கு புறப்படும் திருப்பதி- விழுப்புரம் முன்பதிவில்லா
எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16853) திருப்பதி- காட்பாடி இடையே 15-ந் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த
ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து
மாலை 4. 40 மணிக்கு விழுப்புரம் புறப்படும். இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.