வேதாரண்யத்திலிருந்து உப்பு ஏற்றிக்கொண்டு சென்னை திருப்போரூருக்கு நேற்று காலை 5:00 மணிக்கு லாரி சென்றுகொண்டிருந்தது. லாரியை நாகப்பட்டினம், கீழ்வேளூர் சிவக்குமார், 32 வயது ஓட்டினார். கோட்டக்குப்பம், கீழ்புத்தூர் அருகில் லாரி வந்தபோது, சாலை நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
உப்பு சாலையில் கொட்டியது. லாரி டிரைவர் தப்பியோடினார். கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜே.சி.பி., மற்றும் கிரேன் உதவியுடன் லாரியை அகற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தியதில், பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது.