திருச்சிற்றம்பலம்: ஒர்க் ஷாப் கதவை உடைத்து இரும்பு பொருட்கள் திருட்டு

79பார்த்தது
திருச்சிற்றம்பலம்: ஒர்க் ஷாப் கதவை உடைத்து இரும்பு பொருட்கள் திருட்டு
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மகாவீர்புரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் சூர்யா, 31; வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு புதுச்சேரி-மயிலம் ரோட்டில் வெல்டிங் வொர்க் ஷாப் உள்ளது. கடந்த 24ம் தேதி வேலையை முடித்து விட்டு, வொர்க் ஷாப்பை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின் மறுநாள் 25ம் தேதி வந்து பார்த்த போது, வொர்க் ஷாப் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, வொர்க் ஷாப்பின் கதவை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள இரும்பு பைப்புகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து, வொர்க் ஷாப்பில் திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி