விக்கிரவாண்டி அருகே வி. மாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, (50); இவர், வளவனுார் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணிபுரிகிறார். அதே அலுவலகத்தில் வளவனுாரை சேர்ந்த சாமுண்டீஸ்வரி, (45); என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக தற்காலிக கணினி ஆப்ரேட்டராக பணிபுரிகிறார்.
கடந்த 3 மாதங்களாக சாமுண்டீஸ்வரிக்கு மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதையொட்டி, சாமுண்டீஸ்வரி துாண்டுதலின் பேரில், இதே பகுதியை சேர்ந்த ஞானவேல், (49); கடந்த 4ம் தேதி வளவனுார் பேரூராட்சி அலுவலகம் முன்பு, செயல் அலுவலர் அண்ணாதுரையை அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளார். வளவனுார் போலீசார் ஞானவேல், சாமுண்டீஸ்வரி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.