பார்வையற்றவர்களுக்கு மாநில அளவிலான கைப்பந்து போட்டி

80பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விழிகள் அறக்கட்டளை மூலம் விழுப்புரம் மற்றும் தர்மபுரி கைப்பந்து அணிகள் இணைந்து நடத்தும் பார்வையற்றோர்கள் மாநில அளவிலான ஒருநாள் கைப்பந்து போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கைப்பந்து போட்டியில் சென்னை, விழுப்புரம், தர்மபுரி, தேனி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட கைப்பந்து போட்டி காலை 10 மணிக்கு துவங்கிய நிலையில், மாலை 6 மணியளவில் நடைபெற்ற இறுதி போட்டியில் தருமபுரி மற்றும் கன்னியாகுமரி அணிகள் மோதியதில் அணி வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற அணி வீரர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பரிசும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்வில், 12 மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி