விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கீழ் இயங்கும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பயிற்சியை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், 'வெடிபொருள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டத்தின்படி பாதுகாப்பு வழிமுறைகளை பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டும்' என்றார். டி.ஆர்.ஓ. ஹரிதாஸ் முன்னிலை வகித்தார்.
திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன், 'வெடி மருந்து ரசாயனங்களை பாதுகாப்பாக கையாளுதல் மற்றும் முந்தைய விபத்துகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடம்' என்ற தலைப்பில் பேசினார். இதில் விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்