பில்லுார் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டலாபிஷேக விழா

77பார்த்தது
பில்லுார் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டலாபிஷேக விழா
விழுப்புரம் அருகே பில்லுார் கலைவுராய ஐயனார்ப்பன் கோவிலில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் சன்னதியில், மண்டலாபிஷேக விழா காலை 7.30 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி நடந்தது. 

தொடர்ந்து, காலை 10.00 மணிக்கு தர்மசாஸ்தா ஐயப்பன் சாமிக்கு மலர் அலங்காரம் செய்து, 18 படி பூஜைகள் நடந்தன. மகா தீபாராதனையும், பகல் 1.00 மணிக்கு அன்னதானமும் நடந்தன. இரவு 7.00 மணிக்கு உற்சவர் ஐயப்பசாமி மலர் அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடும், இரவு 8.00 மணிக்கு வீதியுலாவும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி