திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மழையம்பட்டு ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாவட்டச் செயலாளர் நா. புகழேந்தி எம். எல். ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட பொருளாளர் விழுப்புரம் இரா. ஜனகராஜ் , வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி,
மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் மு தங்கம், மாவட்ட துணைச் செயலாளர் டி. என். முருகன், ஒன்றியச் செயலாளர்கள் பி. வி. ஆர். விசுவநாதன், தே. முருகவேல், பேரூர் செயலாளர் பூக்கடை கணேசன்,
ஒன்றிய குழுத் தலைவர் ஓம் சிவ சக்திவேல், பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம் கணேசன், துணைத் தலைவர்கள் கோமதி நிர்மல்ராஜ், ஜோதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.