கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் அசோகரிமாக உணர்ந்தனர். இந்த நிலையில் இன்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொருத்தவரை திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, அரும்பாக்கம், தாழனூர், மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அதே போல விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரகண்டநல்லூர், தேவனூர், மனம்பூண்டி, வடகரை தாழனூர், கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.