திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா, வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜா முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கி, மாணவர்களிடம் பட்டம் இதழை வழங்கிப் பேசுகையில், 'மாணவர்கள் பாட புத்தகங்களை படித்து அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்வது போன்று 'தினமலர் - பட்டம்' இதழையும் படித்து கல்வித்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டி தேர்வுகளில் முன்னிலை பெறவும் வகை செய்யும்' என்றார். நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.